Pages

Friday 17 June 2011

இந்திய மொபைல்களுக்கு Anonymous SMS இலவசமாக அனுப்ப

இப்பொழுது மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. பெரியவர்கள் முதல் பள்ளிக்கு செல்லும் சிறியவர்கள் வரை அனைவரும் போன்களை உபயோகிக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினர் மொபைல் போன்களில் விரும்பி உபயோகிப்பது SMS (Short Messaging Service) என்ற குறுஞ்செய்தி வசதியை தான்.

இதற்காகவே நிறைய பேர் மொபைல் போன்களை வாங்குகின்றனர். இது போன்று SMS அனுப்பினால் காசு போவதோடு நம் நம்பரும் அனுப்புவர்களுக்கு தெரிந்துவிடும். பசங்கள சும்மா வெறுப்பேத்த நம்முடைய மொபைல் போன் நம்பரை மறைத்து எப்படி Anonymous SMS அனுப்புவது என்று காண்போம். இந்த சேவை முற்றிலும் இலவச சேவையே. 

உங்களுடைய நம்பர் தெரியாது என்று ஏதாவது விபரீத SMS அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மறந்து விடுங்கள். நம்பர் தெரியாதே தவிர நீங்கள் உபயோகிக்கும் கணினியின் அனைத்து விவரங்களும் இதில் சேமிக்கப்படும் அதை வைத்து உங்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

  • இந்த சேவையை Smsti தளம் நமக்கு வழங்குகிறது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆகவேண்டிய அவசியமில்லை.
  • இந்த தளத்திற்கு சென்றவுடன் ஒரு சிறிய விண்டோ இருக்கும் அதில் நீங்கள் நீங்கள் SMS அனுப்பவேண்டிய இந்திய நம்பரை முதல் கட்டத்தில் கொடுங்கள்
  • அடுத்து கீழே இருக்கும் கட்டத்தில் உங்களுடைய செய்தியை டைப் செய்து கொள்ளுங்கள்.
  • இதில் 160 character வரை சேர்க்கலாம்.
  • முடிவில் கீழே இருக்கும் Send பட்டனை அழுத்துங்கள்.

  • Send பட்டனை அழுத்தியவுடன் அடுத்து உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் மட்டும் அந்த பக்கத்தில் உள்ள verification நம்பரை சரியாக கொடுத்து கீழே உள்ள Agree to Terms என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் சம்ஸ் நீங்கள் கொடுத்த நம்பருக்கு சென்று விடும். 

  • இந்த முறையில் நீங்கள் ஒரு நாளைக்கு எதனை முறையாவது SMS இலவசமாக அனுப்பி கொள்ளலாம்.
மீண்டும் கூறுகிறேன் உங்களுடைய நம்பர் தெரியாது என்று ஏதாவது விபரீத SMS அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மறந்து விடுங்கள். நம்பர் தெரியாதே தவிர நீங்கள் உபயோகிக்கும் கணினியின் அனைத்து விவரங்களும் இதில் சேமிக்கப்படும் அதை வைத்து உங்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
thanks : sasi

No comments: